சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்வாங்கிய அபார்ட்மென்ட்! அச்சத்தில் மக்கள்
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அமைந்தகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்திற்கு பலனைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. இதன் அறிகுறியாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது நாளை சென்னை கடற்கரைக்கு அருகே நிலவக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று இரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் 150 மி.மீ. மழை பெய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த மழை மேலும் தீவிரமடையும் என்றும் சொல்கிறார்கள். இதனால் மக்கள் இப்போதே காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்கி குவிக்கிறார்கள். அது போல் மருந்து, தண்ணீர் உள்ளிட்டவைகளையும் வாங்கி வருகிறார்கள்.
இன்று காலை முதலே சென்னையை மிக கனமழை பதம் பார்த்து வருகிறது. இதனால் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென உள்வாங்கியது. 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியதுடன், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து சுவர்களுக்கு அருகே இருக்கும் பொருட்களை குடியிருப்புவாசிகள் அகற்றி வருகிறார்கள். இது குறித்து குடியிருப்புவாசிகள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் குடியிருக்கிறார்கள்.
பக்கத்தில் ஒரு உணவகம் கட்டப்பட்டு வருகிறது. அந்த உணவக கட்டுமானத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று காலை 11 மணிக்கு இப்படி ஏற்பட்டது. நாங்கள் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
இதுவரை இது போன்ற பிரச்சினை இல்லை. தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு சுவர்களில் விரிசல் விடுவது நடைபெறுகிறது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications