சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்வாங்கிய அபார்ட்மென்ட்! அச்சத்தில் மக்கள்
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அமைந்தகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்திற்கு பலனைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. இதன் அறிகுறியாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது நாளை சென்னை கடற்கரைக்கு அருகே நிலவக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று இரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் 150 மி.மீ. மழை பெய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த மழை மேலும் தீவிரமடையும் என்றும் சொல்கிறார்கள். இதனால் மக்கள் இப்போதே காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்கி குவிக்கிறார்கள். அது போல் மருந்து, தண்ணீர் உள்ளிட்டவைகளையும் வாங்கி வருகிறார்கள்.
இன்று காலை முதலே சென்னையை மிக கனமழை பதம் பார்த்து வருகிறது. இதனால் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென உள்வாங்கியது. 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியதுடன், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து சுவர்களுக்கு அருகே இருக்கும் பொருட்களை குடியிருப்புவாசிகள் அகற்றி வருகிறார்கள். இது குறித்து குடியிருப்புவாசிகள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் குடியிருக்கிறார்கள்.
பக்கத்தில் ஒரு உணவகம் கட்டப்பட்டு வருகிறது. அந்த உணவக கட்டுமானத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று காலை 11 மணிக்கு இப்படி ஏற்பட்டது. நாங்கள் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
இதுவரை இது போன்ற பிரச்சினை இல்லை. தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு சுவர்களில் விரிசல் விடுவது நடைபெறுகிறது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications