Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்க கடல், அரபிக்கடலில் மாற்றம்..உருவானது வளி சுழற்சி..இன்னும் 2 நாளைக்கு வெடிச்சு கொட்டப்போகுது மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தனித்தனி வளி மண்டல சுழற்சிகள் நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை கொட்டுவது வாடிக்கையாகும். அந்தவகையில் இப்போதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.. கடந்த சில தினங்களாகவே நல்ல மழை மாநிலத்தில் பெய்து வருகிறது.

rain bay of bengal weather report

ராமேஸ்வரம்: நேற்றுகூட ராமேஸ்வரத்தில் 34 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.. இதற்கு காரணம், சூப்பர் மேக வெடிப்பு நிகழ்வு என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.. இப்படிப்பட்ட சூழலில், இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம்.. இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ளதாவது:

"தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 17 செ.மீ., மழை பதிவானது.

மழைப்பொழிவு: இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரை பகுதிகளில் தலா 15; திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி 14; நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி 13 மற்றும் திருக்குவளையில் 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

குமரிக்கடல்: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று உருவாகும் வளி மண்டல சுழற்சி, ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

இப்பின்னணியில், தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கன மழை பெய்யும். தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 24 வரை, மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

வங்கக்கடல்: வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளதால், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மூன்று நாட்களாக நீடித்த மழையால், சாலைகளில் கடல்நீர் போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது... கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட்டதால், வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கிராமத்தில் கடலோரப் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. அங்கு 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+