தொடர் கனமழை.. நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: தொடர் மழை காரணமாக நாளை 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகங்களில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கடலூரில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை , திருப்பத்தூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகங்களில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர் கனமழை மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருவதன் காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை எதிரொலியால், அண்ணாமலை பல்ககலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளுக்கும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications