அரக்கோணத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை இங்குதான்!
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தருமபுரி அரூரில் 11 செ.மீ, மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும் என்றும், வரும் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 24 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், 26, 27 தேதிகளில் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வரும் 27 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 11 செ.மீ, மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாலங்காடு 7 செ.மீ, கும்மிடிப்பூண்டி 6 செ.மீ, பூண்டி 5 செ.மீ, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் தலா 4 செ.மீ, ஜமீன் கொரட்டூர், தாமரைப்பாக்கம், ஆவடி, ஊத்துக்கோட்டை, சோழவரம் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications