துண்டிக்கப்பட்ட சாலைகள்.. மீளாத தூத்துக்குடி. மத்தியக்குழு ஆய்வு.. ரூ.5000 கோடி சேதம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் குழு இன்று தூத்துக்குடியில் ஆய்வை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தமிழக வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. பெருமழை பெய்த காரணத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

Central team is inspecting Tuticorin affected by heavy rains and floods today

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று சொல்லப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் மூழ்கி 16 பேர்,சுவர் இடிந்து விழுந்து 2 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 304 குடிசைகள் பகுதியாகவும், 206 குடிசைகள் முழுமையாகவும், 6 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான இந்த குழுவில், மத்திய நீர்வள அமைச்சக இயக்குநர் ஆர்.தங்கமணி, வேளாண்மை கூட்டுறவு இயக்குநர் கே.பொன்னுசாமி, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை இயக்குநர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி, நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்றும் தூத்துக்குடியில் ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

முன்னதாக வெள்ள பாதிப்புகள் குறித்து வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.5,000 கோடிக்கு சேதம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். முன்னதாக கடந்த 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதில் தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், உடனடி நிவாரணமாக ரூ.2000 கோடியையும் உடனே வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மத்திய அரசின் குழு இன்று தூத்துக்குடியில் ஆய்வை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+