அடுத்த 2 மணி நேரம்.. இடி மின்னலுடன் கொட்டப்போகுது மழை.. சென்னை + 15 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் நாமக்கல் வரை 16 மாவட்டங்களில் மழை வெளுத்து எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தாலும், நேற்று எந்த அளவுக்கு வெயில் அடித்ததோ, அதே அளவுக்கு இரவு மழையும் கொட்டியது. குறிப்பாக சென்னை வளசரவாக்கத்தில் நேற்று ஒரே நாளில் 11 செமீ மழை பெய்தது. சென்னை நெற்குன்றம், சைதாப்பேட்டை, வடபழனி, அமைந்தக்கரை, பூந்தமல்லி, சென்னை சென்ட்ரல், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

அடுத்த 2 மணி நேரம்
இன்று காலையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. மதிய நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று சென்னை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
ஒரு வாரத்துக்கு மழை தான்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 13-07-2025 மற்றும் 14-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15-07-2025 மற்றும் 17-07-2625: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம். இராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை கொளுத்தும்
18-07-2025 மற்றும் 19-07-2025. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதவ மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர மாவட்டத்தின் மலைபடழுதிகளில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (13-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (14-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications