தென் மாவட்ட மக்களே அலர்ட்! அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்தது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மீள சென்னைக்கு பல நாட்கள் தேவைப்பட்டது. தற்போது சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்த நிலையில், தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் தமிழகத்தில் அநேக இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது..
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை, கடலூர், அரியலூர் பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,
திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கரூர், சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications