டெல்டா + தென் மாவட்டங்களில்.. இரவு முழுவதும் கொட்டப்போகும் மழை! லிஸ்ட் போட்ட வானிலை மையம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த அக்.1ம் தேதி தொடங்கி, இன்று வரை சராசரியாக 253.6 மி.மீ வரை மழை பெய்திருக்கிறது. இது இயல்பான மழையை விட 5% குறைவு. இப்படி இருக்கையில் நவ.17ம் தேதி தொடங்கி இந்த மாதம் இறுதி வரை மழை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இன்று இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது "செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.













Click it and Unblock the Notifications