சென்னையில் வெள்ளம்.. 2015 திரும்புது! ‘சூப்பர் எல் நினோ’ எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
சென்னை: கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் உருவான வெள்ளத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். அதுபோன்று மீண்டும் வெள்ளம் ஏற்படும் என்றும் கனமழையின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் சூப்பர் எல் நினோ என்றும் கூறியிருக்கிறது.
வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தால் வெறும் 35% மட்டுமே பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 60% விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.

சூப்பர் எல நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், வழக்கத்தை விட அதிக வெப்பமடைவதைக் குறிக்கும் ஒரு வானிலை நிகழ்வு. இதில் 'சூப்பர் எல் நினோ' என்பது அந்த வெப்பமயமாதல் மிகத் தீவிரமான நிலையை எட்டுவதைக் குறிக்கிறது. அதாவது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில், கடல் நீரின் வெப்பநிலை சராசரியை விட 2°C அல்லது அதற்கு மேல் உயரும்போது அது 'சூப்பர் எல் நினோ' என அழைக்கப்படுகிறது. சாதாரண எல் நினோவை விட இது அதிக ஆற்றல் வாய்ந்தது.
சென்னைக்கு ஏன் ஆபத்து?
வழக்கமாக எல் நினோ ஏற்பட்டால் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை (ஜூன் - செப்டம்பர்) பொய்த்துப் போகும், வறட்சி ஏற்படும். ஆனால், வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) காலங்களில் இது தலைகீழான விளைவை ஏற்படுத்தும்
1997-98 மற்றும் 2015-16 ஆண்டுகளில் தான் உலகம் கடைசியாகக் கடுமையான 'சூப்பர் எல் நினோ' பாதிப்புகளைச் சந்தித்தது. 2015-ல் சென்னையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு இந்தச் சூப்பர் எல் நினோ ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. தற்போது மீண்டும் அதே போன்ற சூழல் உருவாவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னைக்கு ஆபத்து
குறிப்பாக, இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை (ஜூன் - செப்டம்பர்) வழக்கத்தை விடக் குறைவாக இருக்கும் என IMD கணித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்திலேயே இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை. பற்றாக்குறையாக இருக்க 35% வாய்ப்பும், இயல்பை விடக் குறைவாக இருக்க 31% வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
IMD சொல்வது என்ன?
பசிபிக் பெருங்கடலில் தற்போது நிலவும் 'லா நினா' சூழல் மாறி, ஜூன் மாதத்திற்குள் 'எல் நினோ' நிலைக்கு மாறும் என IMD உறுதி செய்துள்ளது. பருவமழையின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட் - செப்டம்பர்) இதன் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும்.
எல் நினோ தீவிரமடையும் போது, அது வடகிழக்குப் பருவமழையைத் தூண்டி சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் அதிதீவிர மழையைத் தரும் என்பதால், இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications