5 மாவட்டங்களில் 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் நாகை, திருவாரூர், தஞ்சை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இப்போது வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

weather rain

கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 29 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை வேளையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய வானிலை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+