சென்னையில் இன்றைக்கு மழை இருக்கு.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் பரவலாக அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இன்றும் நாளையும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.23 தொடங்கி 26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (21-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை சராசரியாக 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இந்த காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை விட 5 சதவீதம் அதிகமாகும். அதேபோல கோயம்புத்தூர், சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை விட கூடுதலாகவே பெய்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 255.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த மழையானது இயல்பான மழையை விட 252 சதவீதம் அதிகமாகும்.
மறுபுறம் தூத்துக்குடி, திருப்பூர், ராமநாதபுரம், கரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல் தர்மபுரி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது.
தென்மேற்கு பருவமழை, கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியிருந்தாலும், செப். 15 - 20 தேதிக்குள்தான் அதிகமான அளவு தமிழ்நாடு மழைப்பொழிவை பெற்று இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக அரக்கோணத்தில் 69.6 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. அதேபோல மதுரை விமான நிலையத்தில் நேற்று ஏறத்தாழ வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு எட்டி இருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி 20 டிகிரி பாரன்ஹீட், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 11.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருக்கிறது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!












Click it and Unblock the Notifications