சென்னையில் இன்றைக்கு மழை இருக்கு.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் பரவலாக அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இன்றும் நாளையும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.23 தொடங்கி 26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (21-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை சராசரியாக 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இந்த காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை விட 5 சதவீதம் அதிகமாகும். அதேபோல கோயம்புத்தூர், சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை விட கூடுதலாகவே பெய்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 255.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த மழையானது இயல்பான மழையை விட 252 சதவீதம் அதிகமாகும்.
மறுபுறம் தூத்துக்குடி, திருப்பூர், ராமநாதபுரம், கரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல் தர்மபுரி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது.
தென்மேற்கு பருவமழை, கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியிருந்தாலும், செப். 15 - 20 தேதிக்குள்தான் அதிகமான அளவு தமிழ்நாடு மழைப்பொழிவை பெற்று இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக அரக்கோணத்தில் 69.6 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. அதேபோல மதுரை விமான நிலையத்தில் நேற்று ஏறத்தாழ வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு எட்டி இருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி 20 டிகிரி பாரன்ஹீட், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 11.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருக்கிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications