Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதியம் 1 மணி வரை.. சென்னை முதல் குமரி வரை.. 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், நெல்லை, குமரி என 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் கூட மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துவிடுகிறது. குறிப்பாக நேற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்தது.

chennai-to-kanyakumari-thunderstorms-with-rain-likely-in-9-districts-till-1-pm

மதியம் 1 மணி வரை

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, குமரி, நாகை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை புதன்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தின் மலைப்பருதிகள், குமரி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களில் வெளுக்க போகுது

நாளை மறுநாள் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (சென்டிமீட்டரில்):

* பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), ஆயிங்குடி (புதுக்கோட்டை), தென்காசி AWS (தென்காசி),அம்முண்டி (வேலூர்) தலா 8 செமீ.
* தென்காசி (தென்காசி), வாலாஜா (ராணிப்பேட்டை), நாங்குனேரி (திருநெல்வேலி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 7 செமீ.

* வேலூர் (வேலூர்), கடலூர் (கடலூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை), அரண்மனைப்புதூர் (தேனி). கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) தலா 6 செமீ.
* குன்னூர் PTO (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தேவகோட்டை (சிவகங்கை). கருப்பாநதி அணை (தென்காசி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), குன்னூர் AWS (நீலகிரி) தலா 5 செமீ மழை பெய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+