Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவில் பறந்த அந்த ஆர்டர்.. 2015-ல் திகைக்க வைத்த செம்பரம்பாக்கம்.. இப்ப வெளிவரும் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டை சூழ்ந்த வெள்ளத்தால் வாங்கி வைத்த பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன. அது போல் சிறு சிறு பெட்டிக் கடைகளில் கூட மளிகை பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன.

Chennai Weather explains about what happened in Chembarambakkam lake during 2015?

வீட்டில் மின் சாதன பொருட்கள் நீரில் மூழ்கி, காயலான் கடைக்குகூட போட முடியாத சூழல் எழுந்துள்ளது. தற்போது இந்த அளவுக்கு மழை பெய்யும் என மக்கள் யாரும் நினைக்கவில்லை, அதுதான் இத்தனை பாதிப்புக்கு காரணம்.

இந்த மழையை 2015 பெருவெள்ளத்துடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். தற்போது வந்த புயலே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வடகிழக்கு பருவமழையே இன்னும் முடியாமல் இருக்கும் போது இனி அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் தற்போது கீழ் தளத்தில் குடியிருக்கக் கூட ஆட்கள் வராமல் வீட்டு உரிமையாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

மற்ற தளங்களுக்கு எல்லாம் போட்டா போட்டி நிலவுகிறது. அது போல் வீட்டை வாங்கும் போதும் கூட மேல் தளங்களையே மக்கள் விரும்புகிறார்களே தவிர கீழ் தளத்தை அல்ல. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம் குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் உள்ளன.

இதுகுறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் அதீத மழை பெய்தது. ஏற்கெனவே அந்த ஏரியில் நவம்பப் 30ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து மழை பெய்து வந்தது. அப்படி பார்த்தால் 36 முதல் 48 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என 2015 டிசம்பர் 1 ஆம் வெளியான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிவிப்பு மிகவும் தாமதம். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் 2.12.2015 ஆம் தேதி அதிகாலை தண்ணீரின் அளவு அபாய அளவை தாண்டியது. ஏற்கெனவே அந்த ஏரியில் 2016ஆம் ஆண்டு கோடை காலத்தையொட்டி 85 சதவீதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பெரு மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திறந்துவிடும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டார்கள். இதனால் ஏரியில் நீர் பாயும் திசையில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சூழல் குறித்து பலருக்கு தெரியாது. இதனால் ஏரி திறப்பு விவகாரத்தை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேக வெடிப்பு போன்ற மழையால் தண்ணீரின் அளவுக்கு அபாய கட்டத்தை எட்டிவிட்டால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் 76 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு இருந்தது. ஆனால் நகரில் பெய்த பெரு மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு 2015 ஐ விட தற்போதுதான் மக்களுக்கு அதிகரித்துள்ளது என சென்னை வெதர் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+