பாஸ்ட் இஸ் பாஸ்ட்! இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா? அதுவும் இடி மின்னலுடன்! சென்னை ரெயின்ஸ்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்றைய தினம் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு திசை வேறுபாடு காரணமாக சென்னையில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னையில் வெப்பம் அதிகரித்தது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் புழுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் மூன்று நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் மழை இருக்குமா இருக்காதா எங்கெல்லாம் இருக்கும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கிறது. இதுகுறித்து சென்னை ரெயின்ஸ் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இன்றைய தினம் கடலூர் முதல் மகாபலிபுரம் வரையுள்ள கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புதிய புதிய காற்று உருவாவதுதான் மழைக்கு காரணம் என்றும சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications