Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீவிர புயலாக கரையைக் கடக்க தொடங்கியது "டானா.." மணிக்கு 120 கி.மீ வேகம் வரை வீசும் காற்று.. ஹை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டானா புயல் நள்ளிரவு 12.20 மணிக்கு புயல் கரையைக் கடக்க தொடங்கியது. அடுத்த 3-4 மணி நேரம் வரை புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். புயல் கரையைக் கடக்க தொடங்கியிருப்பதால் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழையும் பெய்து வருகிறது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடையிடையே 120 கிலோ மீட்டர் வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று புயலாகவும் வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டு உள்ளது. டானா புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது. இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

cyclone dana west bengal odisha

புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை வீச வாய்ப்புள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகக்ள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் 4 லட்சமும் பேரும், மேற்கு வங்காளத்தில் 2.82 லட்சம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 7,200 புயல் நிவாரண முகாம்களை ஒடிசா அரசு ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் 22 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

டானா புயலினால் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால்சோட் மாவட்டங்கள் அதிக அளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 100 - 120 கி.மீட்டர் வரை வீசும் என்றும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலிலும் 1 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், பூர்பா மற்றும் பஸ்சிம் மெதினிபூர், ஜார்கிராம், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்லி ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டானா புயல் நள்ளிரவு 12.20 மணிக்கு புயல் கரையைக் கடக்க தொடங்கியது. அடுத்த 3-4 மணி நேரம் வரை புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். புயல் கரையைக் கடக்க தொடங்கியிருப்பதால் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழையும் பெய்து வருகிறது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடையிடையே 120 கிலோ மீட்டர் வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+