60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் அச்சுறுத்தும் டிட்வா புயல்.. ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்!
சென்னை: டிட்வா புயலால் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. நாளை புறப்படும் ரயில்களும் மாற்றப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. தனுஷ்கோடியில் சாலையை கடல் நீர் மூழ்கடித்தது. இதனால் தனுஷ்கோடியில் உள்ள மீனவ மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களும் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பாம்பன் கடலில் பலத்த காற்று வீசிவருவதால் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் பாம்பன் புதிய ரயில் பாலத்தினை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ஓகா ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளவும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ராமஸ்வரத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22662) மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் நாளை (29 ஆம் தேதி) சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்:22662) இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16344) ரயிலும் நாளை இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
இதேபோல் சென்னை எழும்பூர் விரைவு எக்ஸ்பிரஸ் (வ.எண்:16752), கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22621), தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16104) ஆகிய ரயில்கள் நாளை (29ம் தேதி) மண்டபத்தில் இருந்து புறப்படும். திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (வ.எண்: 16850) மானாமதுரையில் இருந்தும், மதுரை பயணிகள் உச்சிப்புளியில் இருந்தும் நாளை புறப்படும். இது தவிர புவனேஸ்வர் -ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 20849) மண்டபத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இட்லி, தோசை கடைகள் தமிழ்நாட்டில் திணறுதா? 28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? மக்கள் அவலம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications