60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் அச்சுறுத்தும் டிட்வா புயல்.. ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்!
சென்னை: டிட்வா புயலால் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. நாளை புறப்படும் ரயில்களும் மாற்றப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. தனுஷ்கோடியில் சாலையை கடல் நீர் மூழ்கடித்தது. இதனால் தனுஷ்கோடியில் உள்ள மீனவ மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களும் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பாம்பன் கடலில் பலத்த காற்று வீசிவருவதால் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் பாம்பன் புதிய ரயில் பாலத்தினை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ஓகா ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளவும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ராமஸ்வரத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22662) மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் நாளை (29 ஆம் தேதி) சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்:22662) இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16344) ரயிலும் நாளை இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
இதேபோல் சென்னை எழும்பூர் விரைவு எக்ஸ்பிரஸ் (வ.எண்:16752), கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22621), தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16104) ஆகிய ரயில்கள் நாளை (29ம் தேதி) மண்டபத்தில் இருந்து புறப்படும். திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (வ.எண்: 16850) மானாமதுரையில் இருந்தும், மதுரை பயணிகள் உச்சிப்புளியில் இருந்தும் நாளை புறப்படும். இது தவிர புவனேஸ்வர் -ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 20849) மண்டபத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications