டிட்வா புயலால் மழை தட்டி வீசப்போகுது.. தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
சென்னை: டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 28 ஆம் தேதி) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' வார்னிங்கும் கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'மஞ்சள் அலர்ட்' வார்னிங்கும், விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு " டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த டிட்வா புயல் தென்மேற்கு வங்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அன்று அதிகாலைக்குள் வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரையை வழியாக கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
வங்கக்டலில் உருவாகி உள்ள டிட்வா புயலால் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 வரையிலும் இடையிடையில் 80 கி.மீட்டர் வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மேலும், தொடர் கனமழை மற்றும் கடலில் உயரிய அலை சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 28 ஆம் தேதி) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை, தூத்துக்குடி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' வார்னிங்கும் கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'மஞ்சள் அலர்ட்' வார்னிங்கும், விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications