“டிட்வா புயல் சென்னையை தாக்குமா என்று தெளிவாக தெரியவில்லை” - அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேட்டி
சென்னை: சென்னையை டிட்வா புயல் தாக்குமா? என்பது பற்றியும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். புயலின் தாக்கம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் , "சென்னை மற்றும் விழுப்புரத்தில் தலா 5 பேரிடர் மீட்பு படை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அதிக மழை பதிவாகியுள்ளது.
டிட்வா புயல் சென்னைக்குள் வராமல் சென்னையை ஒட்டியே செல்லும் என வானிலை மையம் கூறியுள்ளது. டிட்வா புயல் சென்னையைத் தாக்குமா? என்று தெளிவாகத் தெரியவில்லை. 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவைக்க உள்ளோம்.
விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாளை பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுவரை போக்குவரத்து பாதிப்பு, உயிரிழப்பு இல்லை. 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன, 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. எந்தத் துறை அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து, துறை சார்ந்த மூத்த அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லா மாவட்டத்திலும் 6000+ நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications