Cyclone Fengal LIVE: மிரட்டிய ஃபெஞ்சல் புயல்.. சென்னை மீனம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 செமீ மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் இன்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை 12 மணி நேரத்தில் 15 செமீ மழை பெய்துள்ளது. பேசின் பிரிட்ஜில் 14 செமீ மழையும், வலசரவாக்கத்தில் 13.5 செமீ மழையும், வடபழனியில் 13.38 செ.மீ மழையும், திருவொற்றியூர் - 13.35 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

பெங்கல்- பெஞ்சல் புயல் குறித்த லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்

cyclone fengal  weather  chennai rains  tamil nadu

Nov 30, 2024, 10:51 pm IST

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் வால் பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
Nov 30, 2024, 10:11 pm IST

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சூறைக்காற்று வீசி வருகிறது. மழை ஓய்ந்த நிலையில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே பலத்து காற்று வீசுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம், மரக்காணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Nov 30, 2024, 9:55 pm IST

இன்று இரவுக்குள் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன்
Nov 30, 2024, 9:55 pm IST

சென்னையில் புயல், மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை இன்று இரவுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் சரியாக செயல்படுகிறது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். மழையின் தாக்கம் குறையும் வரை சென்னையில் உள்ள நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
Nov 30, 2024, 8:48 pm IST

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Nov 30, 2024, 8:17 pm IST

இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Nov 30, 2024, 7:53 pm IST

சென்னையில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தாமதம் இன்றி இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1860 425 1515 என்ற எண்ணையும், மகளிர் 1553370 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
Nov 30, 2024, 7:34 pm IST

சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம் செய்யப்படும் - மின் வாரியம்

தி.நகர், கோடம்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலைகளில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே மின் விநியோகம்- மின் வாரியம் மின்சார பெட்டி வரை தேங்கியுள்ள மழை நீரின் அளவு குறைந்தால் மட்டுமே மின் விநியோகம் - மின் வாரியம்

எங்கெல்லாம் தண்ணீர் வடிகிறதோ அங்கெல்லாம் உடனே மின்சாரம் கொடுக்கப்படும் - மின் வாரியம்
Nov 30, 2024, 7:31 pm IST

சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
Nov 30, 2024, 7:11 pm IST

வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது - வானிலை மையம்
Nov 30, 2024, 7:11 pm IST

புயலின் முன்பகுதி தற்போது கரையை தொட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Nov 30, 2024, 7:11 pm IST

அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிடும்- வானிலை மையம்
Nov 30, 2024, 7:06 pm IST

மரக்காணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல், மழை காரணமாக மரக்காணம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆவடி பகுதியில் காலை 11 மணி முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகு மின் வினியோகம் வழங்கப்படும் என மின்சார வாரியத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
Nov 30, 2024, 6:40 pm IST

செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. எனினும் பாதுகாப்பாக உள்ளது என்று காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக ஏரியில் நீர்மட்டம் கடகடவென நிரம்பியதால், மதகு பகுதியில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Nov 30, 2024, 6:34 pm IST

கோவையில் நாளை முதல் வரும் 3 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Nov 30, 2024, 6:05 pm IST

பெஞ்சல் புயல் சற்று நேரத்தில் கரையை கடக்க உள்ளதால் சென்னையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. கடலூரிலும் சூறைக்காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Nov 30, 2024, 5:57 pm IST

புயல், கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்

வரும் 10 ஆம் தேதி வரை மின் கட்டணத்தை அபராதம் இன்றி செலுத்தலாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
Nov 30, 2024, 5:56 pm IST

சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுகிறது. பெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது - சென்னை விமான நிலைய நிர்வாகம்.
Nov 30, 2024, 5:53 pm IST

சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்பவடுவதாக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Nov 30, 2024, 5:47 pm IST

இன்று இரவு 7 மணி வரை அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஈரோடு, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது - சென்னை வானிலை மையம்
Nov 30, 2024, 5:34 pm IST

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு 7 மணி வரை கன முதல் மிக கனமழை வாய்ப்பு உள்ளது - சென்னை வானிலை மையம்
Nov 30, 2024, 5:28 pm IST

சென்னை ஊரப்பாக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
Nov 30, 2024, 5:25 pm IST

பெஞ்சல் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று மாலையில் புதுச்சேரி அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது.
Nov 30, 2024, 5:20 pm IST

பெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது - வானிலை மையம்.
Nov 30, 2024, 5:07 pm IST

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் 4 மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
Nov 30, 2024, 5:02 pm IST

சென்னை வளசரவாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
Nov 30, 2024, 4:57 pm IST

மெரினா கடற்கரையில் வீசும் பயங்கர காற்றால் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Nov 30, 2024, 4:54 pm IST

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 4,856 கனஅடியாக அதிகரிப்பு.
Nov 30, 2024, 4:39 pm IST

சென்னை தாம்பரம் காயத்ரி நகரை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் வசிக்கும் மக்கள் ஜேசிபி வாகனம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
Nov 30, 2024, 4:30 pm IST

பலத்த காற்று எச்சரிக்கையை பொறுத்தமட்டில் புயல் இன்று கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் - தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+