Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வெளுத்துக் கட்டும் மழையிலும் 100 சதவீதம் பால் விநியோகம்.. ஆவின் நிர்வாகம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறாவளியுடன் கூடிய காற்று மற்றும் கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. சில சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பல்வேறு இடங்களில் மழைநீர் சிறிது நேரத்தில் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.

cyclone fengal chennai rains tamil nadu

சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் 9 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால், அவ்வழியாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. 6 சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் வடிந்துள்ள நிலயைில், 3 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் மதியத்துக்குள் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், புயல் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்படுவதால் இன்று இரவு வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், கோயம்பேடு, வடபழனி, போரூர், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

அதேபோல, ரெட் ஹில்ஸ், பொன்னேரி, மணலி, திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், பாடி, அயனாவரம், அண்ணா நகர், அசோக் நகர், கேகே நகர், குரோம்பேட்டை, குன்றத்தூர், நாவலூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். சாலைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு 100 சதவீதம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 லட்சம் லிட்டர் பால் , 25,000 பாக்கெட் UHT பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின் பால், பால் பவுடர் மற்றும் UHT பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+