மிக்ஜாம் புயல்: நடிகர்கள் சூர்யா, கார்த்தி முதல் கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு முதல் கட்டமாக ரூ10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி அறிவித்துள்ளனர். தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இருப்பதாகவும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி தெரிவித்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகி உள்ள மிக்ஜாம் புயல் சென்னை அருகே சுமார் 30 மணிநேரம் நிலை கொண்டு ருத்ரதாண்டவமாடியது. பேயாட்டம் போட்ட மிக்ஜாம் புயல் 35 மணிநேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சுமார் 40 செ.மீ. வரை மழையை கொட்டிவிட்டுள்ளது. தற்போது மிக்ஜாம் புயல் ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டது. ஆந்திராவில் நெல்லூர்- மச்சிலிபட்டணம் இடையே நாளை காலை கரையை கடக்கிறது மிக்ஜாம் புயல்.

சென்னை மாநகரம், புறநகர் பகுதிகளில் கனமழை குறைந்து வருவதால் மீட்பு, நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் இந்த பணிகளை இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு உதவ நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும் சூர்யா, கார்த்தி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications