புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்.. டிச.,11ல் சென்னை வரும் மத்திய குழு.. 2 நாள் ஆய்வு! ஏன் முக்கியம்?
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் (டிசம்பர் 12) தமிழகத்துக்கு மத்திய குழு வருகை தர உள்ளது. இந்த குழு 2 நாள் ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக சென்னை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சென்னையில் பாதிக்கப்பட்டது. கடந்த 5ம் தேதி புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இதையடுத்து சென்னையில் மழை என்பது குறைந்த நிலையில் தற்போது படிப்படியாக சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தின் புயல் வெள்ள பாதிப்புக்கு ரூ.5,060 கோடி நிவாரணமாக அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதோடு திமுக எம்பிக்களும் நாடாளுமன்ற கூட்டத்தில் இதே கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள். அதோடு தமிழகத்தில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கிடையே தான் தமிழகத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் வந்து புயல் பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளனர். இதற்கிடையே தான் மத்திய அரசு சார்பில் புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் அடுத்தக்கட்டமாக தமிழகத்துக்கு மத்திய குழு வர உள்ளது. நாளை மறுநாள் டெல்லியில் இருந்து மத்திய குழு சென்னை வருகிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் இந்த குழு அதன்பிறகு சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர். டிசம்பர் 11, டிசம்பர் 12 என 2 நாட்கள் இந்த குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
அதன்பிறகு இந்த குழு டிசம்பர் 12ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்லும். அதன்பிறகு இந்த குழு புயல் பாதிப்பு குறித்து அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கும். அந்த அறிக்கை என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் மத்திய அரசு அடுத்தக்கட்டமாக தமிழகத்துக்கு புயல், வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை வழங்கும். இதனால் மத்திய குழுவின் இந்த 2 நாள் ஆய்வு என்பது மிகவும் முக்கியமானதாகும்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications