மிரட்டும் ‛ரெமல்’ புயல்.. நாளை கொட்டப்போகும் அதி கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ரெமல் புயல் அதி தீவிர புயலாக மாறி உள்ளது. இந்த புயல் காரணமாக நாளை எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‛ரெமல்' என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 5.30 மணி அளவில் வலுப்பெற்றது.

அதன்பிறகு நேற்று இரவில் புயலாக உருவானது. இந்த புயல் தீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது வங்கதேசத்தின் கேப்புப்பாராவுக்கும் மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும். அந்த சமயத்தில் 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கதேசம், மேற்கு வங்க கடலோர பகுதிகளில் அதி கனமழை மற்றும் சூறைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு வெதர்மேன் ரெமல் புயல் தொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது புயலால் நாளை மழை எங்கு பெய்யும் என அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‛‛நாளை காலை ரெமல் புயல் கொல்கத்தாவில் நிலை கொண்டிருக்கும். இதனால் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது'' என தெரிவித்துள்ளார்.
இந்த ரெமல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடந்தாலும் கூட அதன் தாக்கம் என்பது 28 ம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், திரிபுரா, வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் மற்றும் வங்கதேசத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரெமல் புயல் கரையை கடப்பதையொட்டி கொல்கத்தா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதோடு இன்றும், நாளையும் 350க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications