டிட்வா புயலின் முன்பகுதி எங்கே விழும்? இந்த மாவட்ட மக்கள் நாளை வெளியே வராதீங்க- ஹேமசந்திரன் வார்னிங்
சென்னை: காவிரி டெல்டா மாவட்ட நிலப்பரப்பின் மீது நாளை டிட்வா புயலின் முன்பகுதி விழும் என்பதால் அன்றைய தினம் அப்பகுதி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் "டிட்வா" புயல் குறித்த காவிரி டெல்டா மக்களுக்கான விரிவான அறிக்கை: இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவி வரும் டிட்வா புயலின் முன் பகுதி (மேற்கு பகுதி) காவிரி டெல்டா மாவட்ட நிலபரப்பின் மீது நவம்பர் 29ம் தேதி முன்னேறும்.

இதன் காரணமாக நவம்பர் 28ம் இரவு முதல் (நவம்பர் 30-ம் தேதி) காலை வரை 36 மணி நேரத்திற்கு கீழ்கண்ட முன்னெச்சரிக்கை அறிவுறுதல்கள் வழங்கப்படுகிறது.
1. புயல் டெல்டா கடற்கரையை அடையும் போது மேலும் வலுபெற்று நவம்பர் 29ம் அன்று புயலின் மேற்கு பகுதி காவிரி டெல்டா மாவட்டங்கள் மீது விழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2. இதன் காரணமாக நவம்பர் 28 (வெள்ளி) இரவு துவங்கி நவம் 30ம் தேதி (ஞாயிறு) காலைக்குள் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழை பதிவாகும்.
3. நவம்பர் 29-ம் தேதி குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும், அதித கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
4. குறிப்பாக நவம்பர் 29 (சனிக்கிழமை) காவிரி டெல்டா மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அனைத்து விதமான பயணங்களையும் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5. விவசாயிகள் விளை நிலங்கள் தண்ணீரை முழுமையாக வடியவைத்து, வடிகால்களில் கவனைகள் அகற்றிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6. அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் நவம் 30ம் தேதி வரை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
7. தாழ்வான இடங்களில், நீர் நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்வது நல்லது.
8. இப்புயலால் காற்று பாதிப்பு இருக்காது, மக்கள் காற்று அச்சம் துளியும் கொள்ள வேண்டாம்.
9. மீனவர்கள் கடல் சீற்றம் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், படகுகளை பாதுக்காப்பாக நிறுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
10. நவம்பர் 29, 30 தேதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்வது நல்லது.
டெல்டாவெதர்மேன் வானிலை ஊடகத்தில் தொடர்ந்து நிகழ் நேர அறிக்கைகள் வழங்கப்படும். வானிலை தகவல்கள் அறிந்து எச்சரிக்கையாகவும், பாதுக்காப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
'டிட்வா' என்ற பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்துள்ளது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும்.
இந்த புயலானது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுவை மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications