சென்னைக்கு மேலே பாருங்க! எப்படி கூடி நிக்கிதுன்னு! சாட்டிலைட் போட்டோவை பாருங்க.. வருது தாழ்வு மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு மேலே அதிக அளவில் மழை மேகங்கள் கூடி நிற்கின்றன. வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர்வதன் காரணமாக சென்னையில் கனமழைக்கான சாதகமான சூழல்கள் ஏற்பட்டு உள்ளன.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பு இல்லை. ஆனால் இதன் காரணமாகவே கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

weather

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை - தமிழக கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் அடையக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும்.

சாட்டிலைட் புகைப்படங்கள்: இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சென்னைக்கு மேலே அதிக அளவில் மழை மேகங்கள் கூடி நிற்கின்றன. தாழ்வு மையம் நகர்வதால்... மழை மேகங்கள் ஒரு பக்கமாக சென்னைக்கு மேலே திரண்டு உள்ளன.

வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர்வதன் காரணமாக சென்னையில் கனமழைக்கான சாதகமான சூழல்கள் ஏற்பட்டு உள்ளன. புகைப்படத்தில் இவை தெளிவாக இருக்கின்றன.

இதில் சிக்கலே தற்போது இது மெதுவாக நகருகிறது. இது மெதுவாக நகர்வது.. அல்லது நகராமல் இருப்பது தான் பெரிய சிக்கலாக மாறும். ஏனென்றால் ஒரு புயல் சின்னம் மெதுவாக நகர்ந்தால் அது மிகப்பெரிய அளவில் பலம் அடையும்.

பொதுவாக புயல் மெதுவாக நகர நகர அதன் வலிமை அதிகரிக்கும். இதை நோக்கி இன்னும் காற்று, ஈரமான மேகங்கள் அதிக அளவில் குறையும். இதன் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

இந்த தாழ்வு மையம் நேற்று நகர்ந்து இடம் மாறி இருக்க வேண்டும். ஆனால் இடம் மாறவில்லை. இந்த தாழ்வு மையம் கடுமையாக போக்கு காட்டி வருகிறது. சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் இந்த தாழ்வு மையம் சமயங்களில் நகராமல் உள்ளது. உதாரணமாக இன்று தாழ்வு மையம் பெரிதாக நகரவே இல்லை. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மிகவும் மெதுவாக நகர தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக இதன் வலிமை அதிகரித்தபடியே இருக்கிறது. இது நிலத்திற்கு அருகே அடுத்த சில நாட்களில் வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் இது அதிக அளவில் மழையை கொடுக்கும். அதோடு தாழ்வு மையம் கரையை கடந்த பின் வலிமையாக மழை பெய்யும். இதன் காரணமாகவே அடுத்த 4 நாட்கள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை வரும். முக்கியமாக வடதமிழ்நாட்டில் மிக அதிக அளவில் மழை பெய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+