ஆட்டம் காட்டும் வானிலை.. சம்மருக்கு முன்பே கொளுத்தும் வெயில்.. அதிலும் இன்னைக்கு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வெப்ப நிலை இயல்பை விட இன்று 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே சில இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. பகல் நேரங்களில் அதிகரிக்கும் உஷ்ணத்தால், இப்பவே கத்திரி வெயில் காலம் போல இருக்கிறதே என மக்கள் நினைக்கும் அளவுக்கு வெயில் வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் இயல்பை விட வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்குவாய்ப்புள்ளது. நாளை முதல் 23 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
24 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பறிலை 12-13 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications