அதிக புயல்களை வீசப் போகும் டிசம்பர்.. சென்னை மக்களே எச்சரிக்கை..! MJO பற்றி தெரியுமா?
சென்னை: இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கத்தைவிடப் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆகவே, சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மழைக் காலம் தொடங்கிவிட்டாலே முன்பு எல்லாம் கடலோர மக்கள் அதிகம் பயப்படுவார்கள். அதேபோல மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடும். இந்த அறிவிப்பு பெரும்பாலும் மீனவ மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதாகவே இருந்துள்ளது.

ஆனால், காலநிலை மாற்றத்தால் இன்று மழைக் காலம் என்றால் சென்னை மக்கள் வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய அளவுக்குப் பயம் நிலவுகிறது. வீடு மூழ்கிவிடுமோ? சாப்பாட்டுக்கூட வழி இல்லாமல் தவிக்க வேண்டிய நிலை வருமோ? வேளச்சேரி தப்புமா? பள்ளிக்கரணை என்ன ஆகும் எனச் சென்னை மக்கள் மிகச்சாதாரணமாக உரையாடலின் போது பொது இடங்களில் கவலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இப்போதே காரை எந்தப் பாலத்தில் கொண்டு போய் நிறுத்தலாம்? வீட்டை வேறு எந்தப் பகுதிக்கு மாற்றலாம் என மனதிற்குள் அசைபோடத் தொடங்கிவிட்டனர். ஒரு பக்கம் மழை பற்றிய பயம் மற்றொரு பக்கம் அக்டோபர் மாதம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு மக்கள் மதிய நேரங்களில் வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர்.
உண்மையில் இயற்கை இப்போது மக்களை வஞ்சிக்க ஆரம்பித்திருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆந்திராவில் வெள்ளம், வயநாட்டில் நிலச்சரிவு என திரும்பிய பகுதிகளில் எல்லாம் இயற்கையின் சீற்றம் அதிகரித்துள்ளது. ஆகவே, சென்னை மக்கள் கவலையில் மூழ்க ஆரம்பித்துள்ளனர். இந்த மாதம் மழையின் நிலைமை எப்படி இருக்கும்? டிசம்பரில் வெள்ளம் வருவதற்காக வாய்ப்புகள் உள்ளதா? எனப் பல சந்தேகங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை விதமாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் மழை தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், "பொதுவாக அக்டோபர் மாதம் முதல் பாதியில் வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மழை வரும். ஏனென்றால் இது ஒரு பருவம் முடிந்து அடுத்த பருவம் தொடங்கக்கூடிய காலம். அதாவது தென்மேற்கு பருவக் காலம் விடைபெற்று வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும். இந்தக் காலத்தில் காற்றின் திசை மாறும். இதனால் வட உட்புற மாவட்டங்களில் நல்ல மழை எதிர்பார்க்கலாம். திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்.
படிப்படியாக இந்த வானிலை சூழல் மாறும் போது கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கும். காற்றின் திசை கிழக்குநோக்கி வரும்வரை கடலோரப் பகுதிகளில் மழை இருக்காது. வானிலை பற்றி பேசுபவர்கள் இப்போது MJO (Madden-Julian Oscillation) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். Madden-Julian Oscillation என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர இருக்கிறது. இது நகரும் போது மழையின் தன்மை, வெப்ப சலனம் என அனைத்தும் அதிகமாகும். MJO இந்தியப் பெருங்கடலை மையமிட்டுள்ளதால், வழக்கத்தை விட அதிக மழையை எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆண்டு எல்நினோ பாதிப்பைப் பார்த்தோம். பசிபிக் பெருங்கடலில் வெப்பமானது இயல்புக்கும் புள்ளி 5 டிகிரி அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு எல்நினினோ ஆனது லா நினினோ ஆக மாறிக் கொண்டே இருக்கிறது. அதாவது கடல் வெப்பமானது இயல்புநிலைக்குக் கீழாகப் புள்ளி 5 டிகிரி இருந்தால் அதை லா நினினோ என்று சொல்வோம். இதனால் புயல்போன்ற அதிகரிக்கும். இதனால் வடகிழக்கு பருவமழைக் காலமே ஜனவரி வரை நீடிக்கக்கூடும். இது விவசாய பெருமக்களுக்குப் பாதகமான சூழலை உருவாக்கும். ஏனென்றால் பொங்கல் காலத்தில் பல பகுதிகளில் அறுவடை அதிகம் நடைபெறும்.
சாதாரணமாக எல் நினினோ ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மழை நின்றுவிட்டால், மீண்டும் மழை வராது. ஆனால் லா நினினோ ஆண்டுகளில் டிசம்பர் முழுக்கவே மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். கூடவே புயல் அதிகம். 2011 ஆம் ஆண்டு தானே புயல் வந்தது. 1964இல் ராமேஸ்வரம் புயலைப் பார்த்தோம். இவை லா நினினோ ஆண்டுகள்தான்" என்கிறார்
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications