கரையை கடந்த பின்பும்.. ஆட்டம் காட்டும் பெஞ்சல்.. 3 மணி நேரமாக ஒரே இடத்தில்.. பாலச்சந்திரன் வார்னிங்
சென்னை: பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபருக்கு பின்னர் தற்போது புதுச்சேரியில் கனமழை பெய்துள்ளது 2004ஆம் ஆண்டு புதுவையில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதற்கு பின் பதிவான மிக அதிக கனமழை இதுதான்.

பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 47 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலையில் 18 செ.மீ., செய்யாறில் 16.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கொளப்பாக்கம் பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
முக்கியமான 3 மணி நேரம்: பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பெஞ்சல் புயல் 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கரையைக் கடந்த புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்சல புயல் 35 மணி நேரம் பயணித்து இன்று (டிச.01) அதிகாலை 1.30 மணிக்கு மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது; 11.30 மணிக்கு பெரும்பாலான பகுதிகள் கரையை கடந்தாலும் 1.30 மணிக்கே முழுமையாக அந்த புயலின் பாகம் கரையை கடந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் இது வலிமை இழக்கும்.
இதனால் அடுத்த 3 மணி நேரம் முக்கியம் ஆகும். ஏனென்றால் இந்த புயல் தற்போது Pull Effect எனப்படும் இழுவை காரணமாக கூடுதலாக மேகங்களை இழுத்து வந்துள்ளது. இந்த மேகங்கள் மழையை கொடுக்கும். இப்படி மழையை கொடுப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல காற்றும், மழையும் நீடிக்கும்.
அதன்பின் இந்த புயல் தாழ்வு நிலையாக வலிமை இழக்கும். தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வலிமை இழக்கும். அதன்பின் முழுமையாக வலிமை இழக்கும். பெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி மோசம்: பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தாலும் தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. காற்றின் வேகம் குறையவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு புதுச்சேரி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றாலும், தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
புதுச்சேரியில் மீட்புப் பணிக்கு ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அண்ணா நகர் முழுக்க நீரில் மூழ்கி உள்ளது. ரெயின்போ காலனி பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications