புரட்டி எடுக்கும் மழை.. நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களுக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 20 மணி நேரமாக விடாமல் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக மேற்கண்ட 4 மாவட்டத்திற்கும் அவசரகால உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையை மிதக்க வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்த பருவமழை தற்போது மீண்டும் தீவிரம் பெற்றுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் குறிப்பாக கடந்த 20 மணி நேரமாக நிற்காமல் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இடையிடே கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட இந்த முறை அதிக அளவு மழை பெய்துள்ளது. அதிக மழைப்பொழிவை பெறாத தூத்துக்குடி மாவட்டத்திலும் வழக்கத்திற்கு மாறாக பல்வேறு இடங்களில் வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் சென்னையில் ஏற்பட்டதை விட அதிக மழை பொழியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையமும் நாளை இரவு வரை இந்த 4 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு கருதி 4 மாவட்டத்திற்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களின் உதவி எண்கள்:
* திருநெல்வேலி - 0462-2501012
* தூத்துக்குடி - 0461-2340101
* கன்னியாகுமரி- 04652-231077
* தென்காசி - 04633-290548
* அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்: 1070, 1077
* வாட்ஸ் அப் எண்: 9445869848. வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்: இதேபோல் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மழைக்கால அவசர உதவிகளுக்கான உதவி எண்களை அறிவித்து உள்ளார். அதன்படி,
* தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை 1077,
* மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் 1070,
* மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104,
* அவசர மருத்துவ உதவிக்கு 108,
* மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம் 94458 54718,
* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவிக்கு 101 மற்றும் 112
ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications