Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டி எடுக்கும் மழை.. நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களுக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 20 மணி நேரமாக விடாமல் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக மேற்கண்ட 4 மாவட்டத்திற்கும் அவசரகால உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையை மிதக்க வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்த பருவமழை தற்போது மீண்டும் தீவிரம் பெற்றுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் குறிப்பாக கடந்த 20 மணி நேரமாக நிற்காமல் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இடையிடே கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Flood affects emergency helpline numbers for 4 districts including Nellai and Thoothukudi

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட இந்த முறை அதிக அளவு மழை பெய்துள்ளது. அதிக மழைப்பொழிவை பெறாத தூத்துக்குடி மாவட்டத்திலும் வழக்கத்திற்கு மாறாக பல்வேறு இடங்களில் வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் சென்னையில் ஏற்பட்டதை விட அதிக மழை பொழியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையமும் நாளை இரவு வரை இந்த 4 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு கருதி 4 மாவட்டத்திற்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களின் உதவி எண்கள்:

* திருநெல்வேலி - 0462-2501012
* தூத்துக்குடி - 0461-2340101
* கன்னியாகுமரி- 04652-231077
* தென்காசி - 04633-290548
* அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்: 1070, 1077
* வாட்ஸ் அப் எண்: 9445869848. வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்: இதேபோல் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மழைக்கால அவசர உதவிகளுக்கான உதவி எண்களை அறிவித்து உள்ளார். அதன்படி,

* தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை 1077,
* மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் 1070,
* மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104,
* அவசர மருத்துவ உதவிக்கு 108,
* மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம் 94458 54718,
* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவிக்கு 101 மற்றும் 112
ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+