தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ஹை அலர்ட் மோடில் குமரி, நெல்லை, மதுரை!
சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, நாகை, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. முதலில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த புயல் நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு புதுச்சேரி அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மிதமான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications