Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட் முழுக்க சூறைக் காற்றோடு அடித்து நொறுக்க போகுது மழை.. 15 மாவட்டங்களுக்கு பறந்த வானிலை மைய அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் காலத்தில் வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மாநிலத்தில் பரவலாக மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் சதமடித்தது. அதீத வெப்பத்தால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன. குறிப்பாக சென்னை உட்படக் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதமும் அதிகரிக்கவே அசவுகரியம் ஏற்பட்டது.

summer rain meteorological dept

அக்னி நட்சத்திரம்

இந்தச் சூழலில் நேற்று மே 4ம் தேதி மாநிலத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கியது. இதனால் மாநிலத்தில் பரவலாக வெயில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாகக் கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டுள்ளது.

சூறைக்காற்று + மழை

இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இரவு 10 மணி வரை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30- 40 கிமீ காற்று வீசவும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் இந்த மாவட்டங்களில் சில இடங்களில் நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. இது தவிர ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம்

மழை காரணமாக இன்றைய தினம் மாநிலத்தில் வெப்பம் குறைவாகவே இருந்தது. இன்றைய தினம் வேலூரில் அதிகபட்சமாக 101.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. இது தவிர மதுரை, தொண்டி ஆகிய இரு இடங்களில் மட்டுமே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்தது. அதாவது கனமழையால் வெப்பம் பெரியளவில் குறைந்தே காணப்பட்டது.

வானிலை மையம்

முன்னதாக சென்னை கிளைமேட் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (05-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (06-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+