பேய் காற்று + கனமழை.. சென்னையிலிருந்து புயல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது! புது அப்டேட்
சென்னை: வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தற்போது சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து புயல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் நிலவிய டிட்வா புயலானது, வடதிசையில் நகர்ந்து, இன்று பிற்பகல் 2.30 மணி அளவில், வேதாரண்யத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும் , காரைக்காலுக்கு தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 330 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும்.
அப்படி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து, இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை(30-11-2025) அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை(30-11-2025) மாலை 25 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல புயல் நெருங்கி வருவதால், மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், மாதவரம், எழும்பூர், தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி என பரவலாக மழை பெய்து வருகிறது.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications