Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்து 3 மணி நேரம்.. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை! சம்மரிலும் ஜில் ஜில் கிளைமேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. கோடைக் காலத்தில் பெய்யும் இந்த திடீர் மழையால் வெப்பம் குளிர்ந்து, குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாகத் தமிழ்நாட்டில் மே மாதம் கோடைக் காலம் வெப்பம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த முறை கிளைமேட் மொத்தமாக மாறியிருக்கிறது. மே மாதம் தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரித்தாலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மழை குறைவாகவே இருக்கிறது.

Good rain in 21 districts of tamil nadu for next three hours stay Chennai meteorological dept

21 மாவட்டங்களில் கொட்டும் மழை

இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணிக்குள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எந்த மாவட்டங்கள்?

மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோடைக் காலத்தில் வெப்பம் உச்சத்தில் தான் இருக்கும். ஆனால், மாலை நேரங்களில் பெய்யும் இதுபோன்ற மழை வெப்பத்தைக் குறைக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்தக் கோடை மழையை வரவேற்கிறார்கள். இன்று 21 மாவட்டங்களிலும் புதுவையிலும் மழை பெய்யும் என்பதால் வெப்பமும் பரவலாகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை மையம்

முன்னதாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "இன்று, தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் துவங்கியது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை கிளைமேட்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (13-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 2-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+