Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி இரவு முழுக்க மழை நிற்காது.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஆரம்பித்த சம்பவம்.. வந்த புதிய அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளிலும் கூட மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை சென்னை உட்படப் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை நிலவுகிறது. இந்தப் பருவமழையால் கடந்த மாதம் இயல்பைக் காட்டிலும் சற்று அதிக மழையே கிடைத்தது. இப்போது மழையின் அளவு சற்று குறைந்தாலும் கூட மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தே வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Good rain is expected across 18 districts along with chennai and suburbs till midnight new alert

18 மாவட்டங்களில் மழை

இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இரவு 10 மணி வரை சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய புறநகர் மாவட்டங்களிலும் கூட மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, திருவாரூர், நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் சாலைகளில் சற்று நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பு ஏற்படலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்

முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "நேற்று (16-11-2025) இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இன்று (17-11-2025) காலை 0830 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்குத் திசையில் மெதுவாக நகரக்கூடும்.

மழை கொட்டும்

இதனால் நாளைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 19ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை கிளைமேட்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை/ மிகக் கன மழை, பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+