heat wave in Tamil nadu: தமிழகத்தில் ஏப்.15 வரை வெப்பம் கடுமை! 7 இடங்களில் சென்சுரி அடித்த கொடுமை!
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது கோடைக் காலம் தொடங்கிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் 75 சதவீத நாட்களில் குளிர் வாட்டி எடுத்தது. காலை நேரத்தில் மூடுபனியும் இருந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வந்தது.

இந்த நிலையில் அந்த பனிகாலம் முடிவடைந்து தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே ஜூஸ் கடைகள் எல்லாம் முளைக்கத் தொடங்கிவிட்டன. அது போல் கேழ்வரகு கூழ், கம்மங்கூழ் விற்பனையகங்களும் தொடங்கப்பட்டன.
இளநீர் கடைகள், கரும்பு சாறு கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. இங்கெல்லாம் இப்போதே மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வீடுகளில் ஏசி ஓடியது ஓடியபடி இருந்து வருகிறது. மார்ச் ஆரம்பத்திலேயே இப்படி என்றால் இன்னும் ஏப்ரல், மே மாதங்களை நினைத்தால் தலையே சுற்றுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் அதுவும் அக்னி வெயிலை மழை பெய்து தணித்தது. அது போல் இந்த முறையும் வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சிகள், வெப்பச்சலனம் உள்ளிட்டவைகளால் மழை பெய்தால் வெயில் அதிகம் இருக்கும் ஊர் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அது போல் ஒரு சில இடங்களில் வெயில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு, கரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், சேலம், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்தது.
சென்னையில் நடப்பு ஆண்டின் முதல் முறையாக நேற்றுதான் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை தொடரும். இதில், ஒரு சில இடங்களில், அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications