Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"55 மணி நேரம்.." மேக வெடிப்பால் ஒரு நிமிடம் கூட விடாமல் கொட்டும் கனமழை! இமாச்சலில் 7 பேர் உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

தர்மசாலா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டி வரும் நிலையில், அம்மாநில மக்கள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் பருவமழை காரணமாகக் கனமழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் பெரியளவில் மழை இல்லை என்ற போதிலும் இந்தியாவின் பிற பகுதிகள் முழுக்க கனமழை கொட்டி வருகிறது.

 Heavy cloudburst in Himachal Pradesh Solan results in death of Seven

அதிலும் குறிப்பாக ஹிமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குப் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேக வெடிப்பு: இதற்கிடையே மேக வெடிப்பு காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள சோலன் மாவட்டம் ஜாடோன் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கனமழையால் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு மாட்டுக் கொட்டகை அப்படியே அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 Heavy cloudburst in Himachal Pradesh Solan results in death of Seven

மேக வெடிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்ததற்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த சோதனையான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். மழைக் காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

55 மணி நேரமாக மழை: இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் கடந்த 55 மணி நேரமாக ஒரு நிமிடம் கூட விடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்குள்ள மண்டி, சிர்மவுர், சிம்லா, ஹமிர்பூர், பிலாஸ்பூர் மற்றும் சோலன் ஆகிய இடங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்து பல வீடுகள் ஆபத்திலும் உள்ளன.

இதனால் கல்கா-சிம்லா, சண்டிகர்-மனாலி, சிம்லா-தரம்ஷாலா, பௌண்டா-ஷிலை என முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட மாநிம் முழுக்க உள்ள 800+ சாலைகள் மூடப்பட்டுள்ளன.. மேலும் இதனால் 2,000க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால் அங்குப் பல இடங்களில் மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

 Heavy cloudburst in Himachal Pradesh Solan results in death of Seven

எச்சரிக்கை: அங்குக் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பியாஸ், பாங் அணை, ரஞ்சித் சாகர் மற்றும் சட்லஜ் நதிகளின் அருகில் உள்ள பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வரை மொத்தம் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சுகு அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இன்று அங்குப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இப்போது வரை 7 பேர் இந்த வெள்ளத்தால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+