Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேய் மழை வெளுக்கப் போகுது.. திருவாரூர், நாகப்பட்டினத்துக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையையும் சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu rain

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு தென்கிழக்கே சுமாா் 410 கி.மீ. தொலைவிலும், மட்டகிளப்புக்கு (இலங்கை) கிழக்கு, தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 980 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 36 மணி நேரத்துக்கு, மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக நகா்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகளில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையே இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கக் கூடும். இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இன்று முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆரஞ்சு எச்சரிக்கை

அதேபோல, திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உறைபனி

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் ஓரிரு இடங்களில் இன்று அல்லது நாளை அதிகாலை வேளைகளில் உறைபனி நிலவும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல, தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் மேற்குறிப்பிட்ட நாள்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+