இன்னைக்கு சம்பவம் தான்! அடுத்த 3 மணி நேரம்.. வெளுத்து வாங்க போகும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை வெளுத்து வாங்கும் என்றும், இடி மற்றும் மின்னலுடன் இந்த மழையானது பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைபகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, நெல்லை, நீலகிரி, குமரி, திருப்பூர், கோவை மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் லேசானது முதல் கனமழை வரை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் தென்காசி, செங்கோட்டை, கடையம், புளியரை, கடையநல்லூர், பாவூர்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.
இதன் காரணமாக இன்று காலையில் இருந்தே லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டஙக்ளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications