சவூதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை.. கார்களை அடித்து சென்ற வெள்ளம்.. முக்கிய நகரங்கள் பாதிப்பு
ரியாத்: சவூதி அரேபியாவில் திடீரென்று கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த நாட்டின் முக்கிய நகரங்களான மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த வெள்ளத்தால் கார்கள் அடித்து செல்லப்பட்டன.
பாலைவன தேசமாக சவூதி அரேபியா உள்ளது. இங்கு காடுகள்,புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள் இருக்கின்றன. இருப்பினும் நாட்டின் 95 சதவீதம் நிலம் என்பது பாலைவனமாக தான் இருக்கிறது.

இதனால் சவூதி அரேபியாவில் மழை என்பது அதிகம் பெய்யாது. இங்கு வெயில் தான் வெளுத்து வாங்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் வெயில் மண்டையை பிளக்கும். 43 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் என்பது நீடிக்கும்.
சவூதி அரேபியாவை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு சராசரி மழை அளவு என்பது 101 மில்லி மீட்டர் என்ற அளவில் மட்டுமே உள்ளது. அதாவது 10 சென்டிமீட்டர் மழை தான் அந்த நாட்டில் சராசரியாக பெய்யும். இருப்பினும் அவ்வப்போது திடீரென்று சவூதி அரேபியாவில் கனமழை வெளுத்து வாங்கும். அந்த வகையில் சவூதி அரேபியாவின் பல இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது.
சவூதி அரேபியாவில் முக்கிய நகரங்களாக உள்ள மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்ட நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக அங்குள்ள பல சாலைகள் மற்றும் சதுக்கங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் அளவுக்கு அதிகமாக பெய்த மழை வெள்ளத்தால் சாலைகள் மற்றும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இந்த மழை குறித்து சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாயத்துறை அமைச்சரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛சவூதி அரேபியாவில் அதிகபட்சமாக மதினா பிராந்தியத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது. இங்கு 49.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் ஜெட்டா நகரில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது 2வது அதிகபட்ச மழை பதிவாகி உள்ள இடமாகும்.
அதேபோல் மெக்கா, மதினா, காசிம், தாபூக், வடக்கு எல்லை பகுதிகளில் இன்று காலை வரை மழை என்பது நீடிக்கும். பரவலாக மழை பெய்வதும், பலத்த காற்று, கடல் சீற்றமும் இருக்கும். அதோடு ஆக்ரோஷமான அலைகள் ஏற்படும். சில இடங்களில் இடி மின்னல் கூட ஏற்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அந்த நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் சார்பில், ‛‛ ஜெட்டா நகரில் மழை என்பது குறையும். ரெட் அலர்ட் என்பது ஆரஞ்சு அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் கனமழை என்பது பரவலான மழையாக பெய்யும்’’ என்று கூறப்பட்டுள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தி தொடர்பாளர் உசேன் அல் க்தானி கூறுகையில், ‛‛ஜெட்டா நகரில் பரவலான மழை முதல் சில நேரங்களில் கனமழை பெய்யலாம். இதனால் பொதுமக்கள் வானிலை மையத்தின் அறிவிப்பை கவனித்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஜெட்டா நகரில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் விமான நிலையம் சார்பில், பயணிகள் தங்களின் விமான பயணத்துக்கு முன்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications