School Leave: கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த பலத்த மழை காரணமாக, கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

கன்னியாகுமரியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறையை அறிவித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
திற்பரப்பில் 18 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது. வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் திற்பரப்பு மற்றும் ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications