மதுரையில் கனமழை.. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 2 விமானங்கள்.. பத்திரமாக தரையிறக்கம்
மதுரை: மதுரையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக 2 விமானங்கள் விமான நிலையத்தில் இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. தொடர்ந்து அரை மணி நேரம் வானில் வட்டமடித்த இரண்டு இண்டிகோ விமானங்களும் தற்போது மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.
சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வந்த நிலையில் தற்போது பத்திரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் 2 நாட்களாக சென்னையை மழை மிரட்டியது. தொடர்ந்து கோவை, திருப்பூரில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று மதுரை அருகே நல்ல மழை பெய்து வருகிறது. இரவு முதல் மதுரையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருச்சியில் ஒருசில இடங்களிலும், காரைக்குடியிலும் இரவு மழை பெய்தது. இந்த நிலையில் தான் கனமழை காரணமாக சென்னையில் இருந்து வந்த விமானம் ஒன்று மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் இண்டிகோ விமான வானில் வட்டமடித்தது. மோசமான வானிலை காரணமாக இந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்ட படியே பறந்தது.
இதையடுத்து பெங்களூரில் இருது வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட தொடங்கியது. தொடர்ந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின் படி இரண்டு விமானங்களும் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்காமல் வானில் வட்டமடித்தனர். சுமார் அரை மணி நேரமாக வானில் வட்டமடித்து வந்த விமானங்கள், பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications