Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழை விடாது.. மதுரை, திண்டுக்கலில் கனமழை விளாசும்.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பனி அதிகரிக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பிப்ரவரி மாதத்திலும் தென் தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. நெல்லையில் நேற்று ஒரே நாளில் 5 செமீ அளவுக்கு மழை பெய்தது. இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Heavy Rain to Lash Madurai and Dindigul Today Dense Fog Likely in Chennai for Next 2 Days

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது

நேற்று (21-02-2026) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (22-02-2026) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு-வடமேற்கு திசையிலும் பிறகு வடகிழக்கு திசையிலும் நகரக்கூடும். இதுமட்டுமின்றி தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மதுரை, திண்டுக்கல்லில் கனமழை கொட்டும்

இதனால் இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

23-02-2026 மற்றும் 24-02-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 25-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

26-02-2026: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-02-2026 மற்றும் 28-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு

நாளை, நாளை மறுநாள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழை அளவு (செமீ):

* நம்பியாறு அணை (திருநெல்வேலி), கழுகுமலை (தூத்துக்குடி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 5 செமீ
* புத்தன் அணை (கன்னியாகுமரி) 4 செமீ,
* சிற்றாறு) (கன்னியாகுமரி), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி) தலா 3 செமீ.
* சிவலோகம் சிற்றாறு-II) (கன்னியாகுமரி). சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), திருநெல்வேலி (திருநெல்வேலி), களியல் (கன்னியாகுமரி). பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 2 செமீ.

* வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி). பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), திற்பரப்பு (கன்னியாகுமரி), குந்தா பாலம் (நீலகிரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் கிளைமேட் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (22-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (23-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 22-02-2026: மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 23-02-2026 முதல் 26-02-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

22-02-2026 மற்றும் 23-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24-02-2026: தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 25-02-2026 மற்றும் 26-02-2026: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்:

22-02-2026: கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 23-02-2026 முதல் 26-02-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+