நீடிக்கும் கனமழை.. ஆறுகளில் வெள்ளம்.. செல்ஃபி எடுக்காதீங்க.. எச்சரித்த கோவை மாவட்ட கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கக் கூடாது என ஆட்சியர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார். குடிசைகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Heavy rains Flooding in rivers Coimbatore District Collector warned not to take selfies

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடுகிறது. வழக்கத்தை விட நேற்று இரவு அதிக அளவு மழை பெய்த காரணத்தால் இந்த தரைப்பாலத்தில் அதிகளவு வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துவருவதால் தற்பொழுது நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தென்னம்மநல்லூர் பகுதியில் உள்ள நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Heavy rains Flooding in rivers Coimbatore District Collector warned not to take selfies

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கக் கூடாது என ஆட்சியர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடிசைகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் செல்ஃபி எடுக்கவோ, அருகில் செல்லவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+