பெங்களூரில் போக்கு காட்டும் வானிலை.. இரவிலும் விடாது வெளுத்த மழையால் தத்தளித்த முக்கிய பகுதிகள்
பெங்களூர்: பெங்களூரில் இன்று மாலை முதல் கனமழை பெய்தது. குறிப்பாக வடக்கு பெங்களூர் பகுதியில் பெய்த பேய் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இரவு நேர நிலவரப்படி சவுடேஸ்வரி வார்டு பகுதியில் கிட்டத்தட்ட 14 செ.மீ மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிரட்ட தொடங்கியிருக்கும் நிலையில், கர்நாடகாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மழை வெளுத்து வாங்கிய நிலையில், திங்கள் கிழமை மழை சற்று ஓய்ந்ததது. மதியம் வரை பெரிதாக மழை பெய்யவில்லை. இத்தனைக்கும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

ஆனால் வெயில் அடித்து கொண்டு இருந்ததால் வானிலை கணிப்பு துல்லியமானதாக இல்லை என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால், மதியத்திற்கு பிறகு திடீரென வானிலை மாறியது. பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. வெளுத்து வாங்கிய மழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக வடக்கு கர்நாடக பகுதிகளில் மிக கனமழை பெய்தது.
மாலை நேரத்தில் பெய்த மழை இரவில் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆர்வலர்கள் கணித்து இருந்தனர். கனமழையால் ஐடி தலைநகரான பெங்களூரில் கடந்த நில நாட்களாகவே மக்களின் இயல்பு நிலை பாதிகப்பட்டு வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். பெங்களூரில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், தண்ணீரும் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திங்கள் கிழமை மதியத்திற்கு மேல் வடக்கு பெங்களூரில் மிக கனமழை பெய்ததால், நெட்டிசன்கள் பலரும் இதுவரை இப்படி ஒருமழையை நாங்கள் பார்த்தது இல்லை என பதிவிட்டதை காண முடிந்தது. வடக்கு பெங்களூரில் மேகக்கூட்டங்கள் திரண்டு நிற்கின்றன. மிக மிக கனமழை மேற்கு மற்றும் வடக்கு பெங்களூரில் பெய்யும். அடுத்த 1-2 மணி நேரத்திற்கு பயணங்களை தவிர்த்துவிடுங்கள். ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்வதற்கு வாய்ப்பு உள்ளது" என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டு இருந்தார்.
வடக்கு பெங்களூரில் திடீரென கொட்டிய பேய் மழையால், அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்பும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவுட்டர் ரிங் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணபட்டது. முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றதால் இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.
இரவு 10 மணிக்கு பிறகு மீண்டும் வடக்கு பெங்களூரில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சவுடேச்வரி வார்டு பகுதியில் கிட்டத்தட்ட 14 செ.மீ மழை பெய்தது. வித்யாரண்புரா பகுதியிலும் 10 செ.மீட்டர் மழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி கிடந்தது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications