ஊத்தங்கரையில் வெளுத்த கனமழை.. 50 செ.மீ ரெக்கார்டு.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ், லாரி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 50 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. ஊத்தங்கரையில் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கி, இரவு 11.30 மணிக்கு கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டதால் பல மாவட்டங்களில் வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரை பகுதியில் 50.3 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் 33.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 32 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கன மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் சாலைகளில் பாய்ந்து ஓடி வருகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. மக்களின் உடைமைகள் சேதமடைந்துள்ளன.
கனமழை, வெள்ளம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பேருந்துகள், லாரி, கார்கள் ஆகியவை வெள்ள நீரில் கவிழ்ந்து கிடக்கின்றன. இன்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று கன முதல் மிக கனமழை பெய்யலாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications