மலையாளக் கரையோரம் கைவரிசை காட்டும் மழை! அதிரடியாக உயரும் அணைகளின் நீர்மட்டம்! ஹாப்பி அண்ணாச்சி!
தேனி: கேரளா மற்றும் தேனியில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் தொடர் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியும், வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.6 அடியும் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17651.67 கன அடியாகவும், வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10347 கன அடியாகவும் உள்ளதால் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று கடற்கரையை நெருங்கி உள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது .தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர் கனமழை பெய்தது. மேலும் நேற்று பகல் நேரத்திலும் விட்டுவிட்டு அவ்வப்போது பலத்த கனமழை பெய்தது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து பத்து மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.
நேற்று காலை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.65 அடியாக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து இன்று காலை ஆறு மணி நிலவரப்படி 127.65 அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17651.67 அடியாகவும்,அணையின் நீர் இருப்பு 4190.40 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் முல்லைப்பெரியாறு அணையில் 52.20 மி.மீ, மற்றும் தேக்கடியில் 100 மி.மீ.மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல மூல வைகை ஆறு, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட ஆறுகளின் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வைகை அணைக்கு அதிகப்படியான நீர் வரத் தொடங்கியதால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.6 அடி உயர்ந்து 55.25 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று காலை 6 மணி அளவில் 49.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணியளவில் 55.25 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10347 கன அடியாகவும், நீர் இருப்பு 2759 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளுக்கு அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு பிரச்சினை இருக்காது என்கின்றனர் அதிகாரிகள்..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications