சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. இரவு முழுவதும் மொத்தம் 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிட்வா புயல் வலுவிழந்திருந்தாலும், சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications