கனமழைக்கு இடையே.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவம்.. சட்டென கூட்டமாக போன போலீஸ்.. நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் மழைக்கு இடையே நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

weather tamilnadu weatherman summer weather news

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தண்ணீர் இல்லை: சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் எந்த சுரங்க பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் நேற்று பகல் முழுக்க மழை பெய்தும் கூட எங்கும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கினாலும் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.

சென்னை: தொடர் மழைக்கு இடையே நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடைக்கலம் தேடிய நபர்களுக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

அங்கே மக்கள் பலர் தஞ்சம் அடைந்துள்ளதை அறிந்து போலீசார் உணவுகளோடு அங்கே சென்றனர். பொதுவாக அங்கே மக்கள் தூங்க போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நேற்று மழை கருதி.. அங்கே மக்கள் தங்க அனுமதிக்கப்பட்டது. பொதுவாக சாலை ஓரம் வசிக்கும் மக்கள் அங்கே தஞ்சம் அடைந்தனர்.

எங்கே உள்ளது?: அரசு இயந்திரம் மிக தீவிரமாக இயங்கியது, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது, வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்று பல காரணங்களால் சென்னைக்கு வந்த பிரச்சனை.. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் அகன்று உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. செங்குன்றம் 28 செ.மீ., ஆவடி 25 செ.மீ., தாமரைப்பாக்கம், பொன்னேரியில் தலா 16 செ.மீ. வெளுத்து வாங்கியது.

10 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+