Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரபிக்கடலின் மேஜிக்.. பருவமழை முடிந்தும் கருக்கும் வானம்! தென் மாவட்டங்களுக்கு மழை.. வானிலை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை மையம் கூறுகையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு வழக்கமாக தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு மழையை கொடுக்கும். ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையானது, தென்னிந்தியா முழுவதும் 80 சதவிகித மழையை கொடுக்கும். ஆனால் இந்த முறை இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. போதிய மழை இல்லாததால் கேரளா சற்று தடுமாறியது. அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்ததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

IMD has announced that it will rain in the southern districts of Tamil Nadu for the next 2 hours

அதேபோல கர்நாடக மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான அளவு நீர் வரவில்லை. எனவே அங்கிருந்து மேட்டூருக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. இது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை பாதித்தது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.

கேரளா, கர்நாடகாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் ஓரளவு போதுமான அளவு மழையை தென்மேற்கு பருவமழை கொடுத்தது.

இதனை தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழை, தொடக்கம் முதலேயே அதிரடியாக மழையை கொடுத்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர ஏறத்தாழ அனைத்து நீர் நிலைகளும் இந்த மழை காரணமாக நிரம்பிவிட்டன. தென் தமிழகத்தில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையுடன் வடகிழக்கு பருவமழை விலகிக்கொண்டிருக்கிறது.

எனவே தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் கடும் குளிரும், பனி மூட்டம் நிலவுகிறது. உதகையில் உறைபனிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதாவது, காலை 10 மணிக்குள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று அதிகாலை முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தான் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+