அரபிக்கடலின் மேஜிக்.. பருவமழை முடிந்தும் கருக்கும் வானம்! தென் மாவட்டங்களுக்கு மழை.. வானிலை அலர்ட்
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை மையம் கூறுகையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு வழக்கமாக தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு மழையை கொடுக்கும். ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையானது, தென்னிந்தியா முழுவதும் 80 சதவிகித மழையை கொடுக்கும். ஆனால் இந்த முறை இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. போதிய மழை இல்லாததால் கேரளா சற்று தடுமாறியது. அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவும் குறைந்ததால், மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

அதேபோல கர்நாடக மாநிலத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான அளவு நீர் வரவில்லை. எனவே அங்கிருந்து மேட்டூருக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. இது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை பாதித்தது. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன.
கேரளா, கர்நாடகாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் ஓரளவு போதுமான அளவு மழையை தென்மேற்கு பருவமழை கொடுத்தது.
இதனை தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழை, தொடக்கம் முதலேயே அதிரடியாக மழையை கொடுத்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர ஏறத்தாழ அனைத்து நீர் நிலைகளும் இந்த மழை காரணமாக நிரம்பிவிட்டன. தென் தமிழகத்தில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையுடன் வடகிழக்கு பருவமழை விலகிக்கொண்டிருக்கிறது.
எனவே தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் கடும் குளிரும், பனி மூட்டம் நிலவுகிறது. உதகையில் உறைபனிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதாவது, காலை 10 மணிக்குள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று அதிகாலை முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தான் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
-
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications