20 செ.மீ வரை கொட்டப்போகும் கனமழை! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருக்கும் காற்றுழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருக்கிறது. இதன் காரணமாக சில இடங்களில் 20 செ.மீ வரை மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று தொடங்கி அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று எச்சரித்திருந்தது. அதாவது அரியலூர்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும்
கோயம்புத்தூர்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
மதுரை
பெரம்பலூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
சேலம்
சிவகங்கை
தென்காசி
தூத்துக்குடி
திருச்சி
திருப்பூர்
விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி முனியுடன் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications